குறிப்பாக, ரத்த தான சேவையில் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் முன்னிலையில் செயல்படுவது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவசர காலத்தில் ரத்தம் தேவைப்படுவதாக தகவல் கிடைத்தவுடன், இளைஞர்கள் இனம், மதம், பாகுபாடு பார்க்காமல் உடனே சென்று ரத்த தானம் செய்து உயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.
கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ரத்த தானம் செய்துள்ளனர். மேலும், ஆதரவற்ற முதியோருக்கும் இவர்களால் இயன்ற உதவிகள் செய்து வரப்படுகின்றன. தருமபுரி மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள், தாய்மார்கள் மற்றும் அவசர நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படும் தருணங்களில் இவர்களே முதலில் சென்று உதவி செய்து வருகின்றனர். ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களின் இந்த மனிதநேய சேவை அப்பகுதி மக்களாலும் சமூக ஆர்வலர்களாலும் பெரிதும் பாராட்டப்படுகிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)