Type Here to Get Search Results !

பாலக்கோடு சுற்றுவட்டாரத்தில் 18ஆம் தேதி மின்தடை.


பாலக்கோடு, நவம்பர் 16:

பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின்மாற்றிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக வரும் செவ்வாய்க்கிழமை (18.11.2025) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று வெள்ளிசந்தை மின்வாரிய செயற்பொறியாளர் முனிராஜ் தெரிவித்துள்ளார்.


பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிசந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, புலிக்கரை, அமானிமல்லாபுரம், பஞ்சப்பள்ளி, சோமனஅள்ளி, ஜக்கசமுத்திரம், மகேந்திரமங்கலம், காடுசெட்டிப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்கள். மின்தடை நேரத்தில் பொதுமக்கள் தேவையான முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies