தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் கீழ்:
-
புனிதப் பயணம் மேற்கொண்டு வந்த 550 கிறித்துவ பயணிகளுக்கு – நபர் ஒன்றுக்கு ₹37,000,
-
50 கன்னியாஸ்திரிகள் / அருட்சகோதரிகளுக்கு – நபர் ஒன்றுக்கு ₹60,000,
ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டியவர்கள்
01.01.2025க்கு பிறகு ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட அனைத்து கிறித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவம் பெறும் இடங்கள்
-
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்
-
சிறுபான்மையினர் நல அலுவலகங்கள்
-
இணையதளம்: www.bcmbemw.tn.gov.in (கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம்)
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை,
கலசமஹால் பாரம்பரிய கட்டிடம்,
முதல் தளம், சேப்பாக்கம்,
சென்னை – 600005
விண்ணப்பிக்க கடைசி தேதி
28.02.2026
தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிறித்துவ மக்கள் இந்த அரசு மானியத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)