பாலக்கோடு, நவம்பர் 14:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்தின் ஜெர்தலாவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓசூர் அசோக் லைலாண்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நடத்திய ஓவியப் போட்டியில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தப் போட்டியில்,
-
விக்னேஸ்வரன் – முதல் பரிசு
-
தனஸ்ரீ – இரண்டாம் பரிசு
என பள்ளியைச் சேர்ந்த இரு மாணவர்கள் மாநில அளவில் சாதனை படைத்தனர். அவர்களுக்கு வெற்றிச்சான்றிதழ்கள் ஏற்கனவே வழங்கப்பட்டன.
இதையொட்டி, இன்று பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் விக்னேஸ்வரன் மற்றும் தனஸ்ரீ ஆகியோருக்கான சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், ஊர்ப்பொதுமக்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று இரு மாணவர்களையும் பாராட்டி வாழ்த்தினர்.
விழாவில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இறுதியில் உதவி தலைமை ஆசிரியர் தெய்வம் நன்றி தெரிவித்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)