தருமபுரி, நவம்பர் 14:
மீனவ சமூகத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேர்வதற்கான போட்டித்தேர்வில் சிறந்து விளங்க, அரசு வழங்கி வரும் சிறப்பு UPSC Coaching பயிற்சிக்கான விண்ணப்பங்கள் தருமபுரி மாவட்டத்தில் பெறப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்தார்.
அரசாணை எண்: 177 (13.09.2017) படி,
-
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும்
-
சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (Anna Institute of Management)
இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்வு செய்து, இந்திய குடிமைப்பணிகள் (UPSC Civil Services) தேர்வுக்கான உயர்தர பயிற்சி அளித்து வருகின்றன.
யார் விண்ணப்பிக்கலாம்?
-
மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் வாரிசுகள்
-
மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுகள்
-
பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள்
எல்லோரும் பயிற்சி திட்டத்தில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் பெறும் வழிகள்
-
www.fisheries.tn.gov.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
-
அல்லது தருமபுரி
-
மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் அலுவலகம்
-
மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்ஆகிய இடங்களில் அலுவலக வேலை நாட்களில் இலவசமாக பெறலாம்.
-
விண்ணப்பிக்க கடைசி நாள்
📅 25.11.2025 மாலை 5.00 மணி
விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன்:
-
பதிவு அஞ்சல் மூலமாகஅல்லது
-
நேரடியாக
மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
தொடர்பு எண்கள் / முகவரி
மேலும் விவரங்களுக்கு மேலே உள்ள எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)