Type Here to Get Search Results !

தருமபுரியில் 1,212 தொழில்முனைவோருக்கு ரூ.219.96 கோடி கடனுதவி – ரூ.50.59 கோடி மானியம் வழங்கிய மாவட்ட தொழில் மையம்.


தருமபுரி, நவ. 17 :

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், மாவட்ட தொழில் மையம் மூலம் மொத்தம் 1,212 நபர்களுக்கு ரூ.219.96 கோடி மதிப்பில் கடனுதவி மற்றும் ரூ.50.59 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.

2021 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில், பல்வேறு தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டங்களின் கீழ் பின்வருமாறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன:

  • NEEDS திட்டம்: 85 நபர்களுக்கு ரூ.10.54 கோடி மானியத்துடன் ரூ.89.10 கோடி கடனுதவி

  • UYEGP: 295 நபர்களுக்கு ரூ.4.00 கோடி மானியத்துடன் ரூ.16.00 கோடி கடனுதவி

  • PMEGP: 289 நபர்களுக்கு ரூ.11.65 கோடி மானியத்துடன் ரூ.33.07 கோடி கடனுதவி

  • PMFME: 387 நபர்களுக்கு ரூ.13.12 கோடி மானியத்துடன் ரூ.38.16 கோடி கடனுதவி

  • AABCS: 66 நபர்களுக்கு ரூ.10.92 கோடி மானியத்துடன் ரூ.41.70 கோடி கடனுதவி

  • KKT: 90 நபர்களுக்கு ரூ.0.36 கோடி மானியத்துடன் ரூ.1.93 கோடி கடனுதவி


மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:

“தருமபுரி மாவட்டத்தில் தொழில் முனைவோர் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. சுயதொழில் தொடங்குவதற்கான அரசின் பல்வேறு நிதி உதவிகள் பல இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றியுள்ளது,”

எனவும் அவர் தெரிவித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies