Type Here to Get Search Results !

தருமபுரியில் நவம்பர் 20 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.


தருமபுரி, நவ 17 :

தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகளின் வேளாண்மை தொடர்பான குறைகளை நேரடியாக கேட்டு தீர்க்கும் நோக்கில் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 20.11.2025 (வியாழக்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.


இந்த கூட்டம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அதியன் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது விவசாய குறைகள், கோரிக்கைகள், பரிந்துரைகளை நிர்வாகத்திடம் நேரடியாக முன்வைத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies