Type Here to Get Search Results !

தருமபுரியில் உலக நவீன வாசக்டமி இருவார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.


தருமபுரி – நவம்பர் 27:

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சார்பில் 2025 ஆம் ஆண்டுக்கான உலக நவீன வாசக்டமி (Vasectomy) இருவார விழிப்புணர்வு பேரணி இன்று துவங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பேரணி கூத்தத்துக்கு கொடியசைத்து துவக்கிவைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.


தமிழ்நாடு குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. பொதுவாக பெண்களே கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிலையில், ஆண்கள் குடும்பநலத்தில் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக அரசு ஆண்டுதோறும் நவீன வாசக்டமி இருவார விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துகிறது.


நவம்பர் 21 முதல் 27 வரை விழிப்புணர்வு வாரம்நவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை சேவை வழங்கும் வாரம் என தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு ஆண் கருத்தடை முகாம்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நவீன தழும்பில்லா கருத்தடை முறையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு அரசு ரூ.1100/- உதவித்தொகை வழங்கும்.


இந்த சிகிச்சை:
  • எளிமையானது
  • பயிற்சி பெற்ற மருத்துவரால் பாதுகாப்பாக செய்யப்படுவது
  • பக்கவிளைவுகள் இல்லாதது
  • மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை
  • பெண்களின் கருத்தடை அறுவை சிகிச்சையைவிட மிகவும் எளிதானது


மேலும் விவரங்களுக்கு தொடர்பு எண்கள்:
8778424339, 9698836388, 9790455407, 8778474051


நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு. சாந்தி, துணை இயக்குநர்கள் பாலசுப்பிரமணியம், புவனேஸ்வரி, பாரதி, நகர நல அலுவலர் இலட்சியவர்ணா, மருத்துவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies