தருமபுரி – நவம்பர் 23
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நாகலூர் கிராமத்தை சேர்ந்த பர்வதம் என்ற பெண் தனது வீட்டு நகை மற்றும் பணத்தைத் திருடிய விவகாரத்தில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
வீட்டிலிருந்து நகை–பணம் மாயம்
பர்வதம் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
-
05.02.2025 காலை 11 மணிக்கு தனது வீட்டில் இருந்த
-
8½ பவுன் நகை
-
127 கிராம் கால்கொலுசு
-
ரூ.5,500 பணம்மாயமானது.
-
-
இதுகுறித்து 06.02.2025 அன்று அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
கணவரிடமிருந்தும் பணத் திருட்டு
பர்வதம் தனது மனுவில் மேலும் கூறியதாவது:
-
தனது கணவர் குமார்,17.09.2025 அன்று வீட்டில் இருந்த பணத்தை திருடிச் சென்றார்.
-
அதன் பின்னரும், 26.10.2025 அன்று தானின்றி இருக்கும் நேரத்தில் மீண்டும் ரூ.30,000 திருடியதாக கூறப்படுகிறது.
வீடு விட்டு வெளியேறுமாறு மிரட்டல்
பர்வதம் தெரிவித்ததாவது:
-
தனது மாமனார் முனியப்பன்,04.07.2024 அன்று,“இந்த இடத்தில் புதிதாக வீடு கட்டிக்கொள்ளலாம்” என்று எழுத்து மூலம் வழங்கியிருந்தார்.
-
ஆனால் 07.11.2025 இரவு 11 மணிக்கு,கணவர் குமார் மற்றும் மாமனார் முனியப்பன் இருவரும் கதவைத் தட்டி,“இந்த வீடு எங்கள் பெயரில் உள்ளது, நீ வெளியேறு” என ஆபாசமாக திட்டியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
சந்தேக நபர்களின் பெயர்கள்
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)