Type Here to Get Search Results !

தருமபுரியில் நில அளவை அலுவலகங்கள் பூட்டு; ஒன்றிப்பின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்.


தருமபுரி, நவம்பர் 18:

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று துவங்கியது. இதன் காரணமாக, தருமபுரி மாவட்டத்திலுள்ள பல நில அளவை அலுவலகங்கள் பூட்டிய நிலையில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.


கோரிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:

  • இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதல் பணிச்சுமையை குறைக்க வேண்டும்

  • குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் தரம் உயர்த்தி வழங்க வேண்டும்

  • 2025ம் ஆண்டு வெளியிடப்பட்ட பதவி உயர்வு தேர்வு பட்டியலில் தகுதி பெற்ற அனைத்து அலுவலர்களையும் இணைத்து பதவி உயர்வு வழங்க வேண்டும்

  • TNPSC மூலம் நில அளவர் பதவிக்கான தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

  • துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும்

  • ஒப்பந்த அடிப்படையில் அளவர்களை நியமிப்பதை நிறுத்தி காலமுறை ஊதியத்தில் மட்டுமே பணி அமர்த்த வேண்டும்

  • புல உதவியாளர்களை ஒப்பந்தத்திலிருந்து காலமுறை ஊதியத்துக்கு மாற்ற வேண்டும்

  • “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட பணிகளுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்


தருமபுரியில் நிலைமை

மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களிலும் செயல்படும் நில அளவை மேலாண்மை மையங்களில்

  • ஆய்வாளர்

  • துணை ஆய்வாளர்

  • வட்ட சார் ஆய்வாளர்

  • குரு வட்ட அளவர்

  • நில அளவர்

ஆகிய பணியிடங்களில் மொத்தம் 105 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது அனைத்து பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், தருமபுரி நில அளவை மேலாண்மை மையம் பூட்டப்பட்டது. இதுபோலவே மாவட்டத்தின் பிற வட்ட அலுவலகங்களும் பூட்டப்பட்டதால், நிலம், பட்டா, சிட்டா மாற்றம், பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies