Type Here to Get Search Results !

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கூந்தல் தானம் செய்த எட்டு வயது பள்ளி மாணவி பிரணித்தா.


தருமபுரி, நவ. 09 -

மனிதநேயம் மற்றும் சமூக சேவை என்ற ஒரே நோக்கில் செயல்பட்டு வரும் “மை தருமபுரி” அமைப்பின் சார்பில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கூந்தல் தானம் விழிப்புணர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. புற்றுநோய் சிகிச்சையின் போது குழந்தைகள் அனுபவிக்கும் மிகப் பெரிய வேதனைகளில் ஒன்று முடி உதிர்வு என்பதால், அவர்களுக்கு உகந்த தலைமுடி தயாரிக்க கூந்தல் தானம் முக்கிய பங்காற்றுகிறது.

இந்நிலையில், தருமபுரி செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி – மைதிலி தம்பதியினரின் எட்டு வயது மகள் பிரணித்தா அவர்கள், புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக தனது தலைமுடியை தானமாக வழங்கி, சிறு வயதிலேயே பெரும் மனிதநேயத்தின் எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார். பிரணித்தா தற்போது அமலா நர்சரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.


அவரது இச்செயலைப் பாராட்டி, “மை தருமபுரி” அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் முனைவர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் செந்தில், சண்முகம், தன்னார்வலர்கள் கணேஷ், குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டு பிரணித்தாவை பாராட்டினர். 


அமைப்பின் தலைவர் சதீஸ் குமார் ராஜா அவர்கள் கூறுகையில்,

“ஒரு குழந்தையின் புன்னகை ஆயிரம் உயிர்களுக்கு நம்பிக்கை. சிறுமி பிரணித்தா செய்த இந்த கூந்தல் தானம், மனிதநேயத்தின் உண்மையான சின்னம். சமூகத்தில் இதுபோன்ற நல்ல செயல்கள் பெருகட்டும்,” என்று தெரிவித்தார்.

 

தருமபுரி முழுவதும் “மை தருமபுரி” அமைப்பு தட்டணுக்குத் தானம், இரத்த தானம், கூந்தல் தானம் உள்ளிட்ட பல சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies