Type Here to Get Search Results !

2026 சர்வதேச மகளிர் தின விழாவில் வழங்கப்படும் ஔவையார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.


தருமபுரி – நவம்பர் 24

பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை செய்து வரும் மகளிரை கௌரவிக்கும் நோக்கில், வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும் உலக மகளிர் தின விழாவில், தமிழ்நாடு அரசு சார்பில் ஔவையார் விருது வழங்கப்பட உள்ளது.


இந்த விருது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.
விருது பெறுபவருக்கு

  • ₹1.50 இலட்சம் மதிப்பிலான காசோலை,

  • பொன்னாடை,

  • சான்றிதழ்
    வழங்கப்படும்.


விருதிற்கான தகுதி விதிமுறைகள்

  1. தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட பெண் ஆகியிருக்க வேண்டும்.

  2. குறைந்தது 5 ஆண்டுகள்,
    பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு,
    மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு,
    பத்திரிகை, நிர்வாகம் போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பு
    செய்திருக்க வேண்டும்.

  3. பெண்கள் தொடர்பான சேவைகளுக்கு மட்டுமே இந்த விருது
    வழங்கப்படும்; பிற சமூக சேவைகள் கருதப்படமாட்டாது.

  4. விருது தொடர்பான முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும்
    செயல்முறை 14.11.2025 முதல்
    அரசின் விருதுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது:

  5. விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2025
    இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டவையே ஏற்றுக்கொள்ளப்படும்.


ஆவணங்கள் சமர்ப்பிக்கும் விதிமுறை

இணையதளத்தில் பதிவு செய்த பின், தேவையான அனைத்து ஆவணங்களும் Booklet வடிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள்மாவட்ட சமூகநல அலுவலகம், கூடுதல் கட்டிடம், பழைய மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி – 636705. தொலைபேசி: 04342-233088 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies