மாவட்ட ஆட்சித்தலைவர் தொடர்ந்து கூறியதாவது:
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஏழைகள், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயனடையும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் தொழில் முனைவோராக பட்டியலின மக்களை உருவாக்குவதற்கான அம்பேத்கர் திட்டம் முக்கியமானது,” என்றார்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதி மேலாண்மை, வரவு–செலவு கணக்கீடு, வணிக யுத்திகள் உள்ளிட்ட தலைப்புகளில் தொழில்முனைவு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மட்டுமே 66 நபர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளதாகவும், இவர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தின் மொத்த மதிப்பு ₹10.92 கோடி எனவும் ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)