Type Here to Get Search Results !

அரூரில் மனைப் பட்டா கேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.


அரூர், நவம்பர் 13:


பட்டியல் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மனைப் பட்டா வழங்காமல் நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது. தகுதியான அனைவருக்கும் மனை பட்டா வழங்கும் வரை போராட்டம் தொடரப்படும் என அறிவிக்கப்பட்டது.

2023 அக்டோபர் 3 முதல் 2025 நவம்பர் 10 வரை மனை பட்டா கோரி தலித், அருந்ததியர், பழங்குடியினர் உட்பட பல்வேறு சமூகத்தார் மனுக்கள் அளித்தும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என போராட்டத்தில் கூறப்பட்டது.


முக்கிய கோரிக்கைகள்

  • செல்லம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கீழானூர் கிராமத்தில் சர்வே எண் 65/2—இல் உள்ள 2.80.0 ஹெக்டேர் புறம்போக்கு நிலத்தை வகைமாற்றம் செய்து, கீழானூர் ஆதிதிராவிடர் மற்றும் கொத்தனாம்பட்டி பழங்குடியினர் மக்களுக்கு மனை பட்டா வழங்குதல்.

  • கைலாயபுரம் (127 குடும்பங்கள்), சட்டையம்பட்டி (140 குடும்பங்கள்), மத்தியம்பட்டி (60 குடும்பங்கள்), சந்திராபுரம் (30 குடும்பங்கள்) ஆகிய இடங்களில் வழங்கப்பட்ட பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்து சிட்டா/பட்டா வழங்குதல்.

  • இட்லப்பட்டி சர்வே எண் 15/1–இல் உயர்நீதிமன்ற உத்தரவின்படி 7 குடும்பங்களுக்கு அளந்தளந்து பட்டா மற்றும் மேலும் 12 குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்குதல்.

  • H. ஈச்சம்பாடி, மேல்செங்கப்பாடி, கத்திரிப்பட்டி, நாட்டான் வளவு, கம்மாளை, கெளபாறை உள்ளிட்ட கிராமங்களில் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசிக்கும் ஏழை மக்களுக்கு மனை/நில பட்டா வழங்குதல்.

  • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முதல்வர் வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாக்களை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்து வழங்குதல்.


போராட்டத்தில் பேச்சாளர்கள்

போராட்டத்திற்கு வட்ட செயலாளர் கே. குமரேசன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன் போராட்டத்தை தொடக்கிவைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், மாநில செயலாளர் எம். முத்து, துணைத்தலைவர் ஜி. கணபதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிவைத்து பேசினர்.

மேலும், கருப்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ஈ. கே. முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் இரா. லெனின், பி. சொக்கலிங்கம், பி. வீரப்பன், ஜடையாண்டி, சி. வேலாயுதம், வாலிபர் சங்க வட்டச் செயலாளர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies