Type Here to Get Search Results !

பாலக்கோடு ஸ்ரீராம் சில்க்ஸ் வாடிக்கையாளருக்கு தீபாவளி குலுக்கலில் ராயல் என்பீல்டு புல்லட் பரிசு வழங்கப்பட்டது.


பாலக்கோடு, அக்டோபர் 31 -

பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் செயல்பட்டு வரும் ஸ்ரீராம் சில்க்ஸ் நிறுவனம், தரமான பட்டு ஜவுளிகள் மற்றும் அனைத்து வயதினருக்கும் பொருந்தக்கூடிய ரெடிமேட் ஆடைகளை குறைந்த விலையில் வழங்கி, பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனம் ஆகும்.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்காக “தீபாவளி ஆடைகள் அறிமுக விழா மற்றும் பம்பர் குலுக்கல் பரிசுத் திட்டம்” அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 1 முதல் 16 ஆம் தேதி வரை ஜவுளி வாங்கிய வாடிக்கையாளர்களில் தினமும் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்ட 5 பேருக்கு மிக்ஸி, குக்கர் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் பம்பர் பரிசாக ரூ.3 லட்சம் மதிப்புள்ள ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


அந்த பம்பர் பரிசுக்கான அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி கே.ஜி.எம். மருத்துவமனை டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் டாக்டர் மோகன பிரியா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குலுக்கல் நிகழ்வை தொடங்கி வைத்தார். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட அவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவர் ராயல் என்பீல்டு புல்லட் பரிசை வென்ற அதிர்ஷ்டசாலி ஆனார்.

நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் சங்கர், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜவேல், ஸ்ரீரங்கா டிபார்ட்மென்ட் ராம்குமார், தொழிலதிபர் ராஜாமணி சரவணன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலகிருஷ்ணன், வீரமணி, மற்றும் ஸ்ரீராம் சில்க்ஸ் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஸ்ரீராம் சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் தமிழ்செல்வன் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies