Type Here to Get Search Results !

பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம்: ஆங்கில துறையில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கு.


தருமபுரி. அக். 22 -

தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆங்கிலத் துறையின் சார்பாக தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.


நிகழ்வில் ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு தொழில் முனைவோர் வாய்ப்புகள், வியாபார முதலீடு மற்றும் வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகள் பற்றிய விளக்கங்களை வழங்கினார்.


முனைவர் சுரேஷ்குமார், சந்தை தேவைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும், அரசின் பல்வேறு முதலீட்டு திட்டங்கள், காப்பீடு திட்டங்கள், பணத்தை சரியான முறையில் சேமித்தல் மற்றும் முதலீடு செய்யும் ஆக்கப்பூர்வமான வழிகள் போன்றவை மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் எடுத்துரைத்தார்.


நிகழ்வை ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் செல்வ பாண்டியன் தலைமை உரையாற்றி தொடங்கினார். ஆங்கிலத் துறை தலைவர் மற்றும் நிகழ்வு அமைப்பாளர் பேரா. சி. கோவிந்தராஜ் துவக்க உரை வழங்கினார். பிற பேராசிரியர்கள் வாழ்த்துரை கூறினர். 

மாணவர்கள் நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தனர்:

  • இரண்டாம் ஆண்டு மாணவன் பாலச்சந்தர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

  • செல்வி சினேகா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

  • முதலாம் ஆண்டு மாணவி செல்வி கிருத்திகா நன்றியுரையை வழங்கினார்.

  • இரண்டாம் ஆண்டு மாணவி ஹேமலதா நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகள் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களால் கவனமாக செய்யப்பட்டிருந்தது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies