Type Here to Get Search Results !

பென்னாகரம் ஏர்ரகொல்லனூர் ஏரியில் 3,500 பனை விதைகள் நடவு — வருவாய் துறை, பேரூராட்சி, பத்திரிக்கையாளர் மன்றம் இணைந்து முன்னெடுப்பு.


பென்னாகரம், அக். 18, 2025

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், ஏர்ரகொல்லனூர் ஏரி பகுதியில் பனை மர வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் பென்னாகரம் வருவாய் துறை, பென்னாகரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பென்னாகரம் பத்திரிக்கையாளர் மன்றம் இணைந்து பனை விதை நடவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியை வட்டாட்சியர் சண்முகசுந்தரம் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இதில் மொத்தம் 3,500 பனை விதைகள் ஏரி கரைப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டது.


நிகழ்ச்சியில் பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் ஆ. ஜீவானந்தம், செயலாளர் சிவகுமார், பேரூராட்சி கவுன்சிலர்கள், நிர்வாக அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


பனை வளர்ப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் நீர்ப்பாசன மேம்பாட்டிற்கும் முக்கியமானதாக இருப்பதால், இதுபோன்ற முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies