பாலக்கோடு, அக்டோபர் 16 -
பேரணியில் டாக்டர் அப்துல் கலாம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பேரணி பாலக்கோடு பேருந்து நிலையத்திலிருந்து எம்.ஜி. ரோடு, கடைவீதி, தக்காளிமண்டி போன்ற முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களில் சுற்றுசூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. பேரணி முடிந்த பிறகு மேக்கலாம்பட்டி ஏரியில் பனை விதை நடவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகள் நடைபெற்றன.
இந்த விழாவில் பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி, தாசில்தார் அசோக்குமார், தொழிலதிபர்கள் முத்து, சரவணன், தருமன், பொன்னுசாமி, மருத்துவர் அசோக், காவல்துறையினர், வனத்துறையினர், டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், மூகாம்பிகை கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
.gif)

.jpg)