பாப்பிரெட்டிப்பட்டி, அக். 13 -
தருமபுரி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி Vijay Vidyalaya மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. 19 வயதுக்குட்பட்ட சீனியர் பிரிவில் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று, மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இந்த வெற்றிக்கு மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெகஜீவன்ராம் மற்றும் ஜெகன் குட்டிமணி பயிற்சி அளித்தனர். வெற்றியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் கலைவாணன், உதவி தலைமை ஆசிரியர் ரகு, கணினி ஆசிரியர் பார்த்தீபன், பசுமைப்படை ஆசிரியர் ராஜாமணி உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்தினர்.
இந்த வெற்றி, மாணவர்களின் திறமையை வெளிப்படுத்துவதோடு, பள்ளியின் விளையாட்டு முன்னேற்றத்தையும், மாணவர்களின் உடல் நல வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.