Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்றிட மனு – பாஜக நிர்வாகிகள் கோரிக்கை.



தருமபுரி, அக். 13 -

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளம் பட்டி சாலையில் உள்ள மந்தைவெளி மைதானத்தில் பல ஆண்டுகளாக அங்கன்வாடி பள்ளி இயங்கி வருகிறது. தற்போது அந்தக் கட்டிடம் பழுது அடைந்ததால், அங்கன்வாடி பள்ளி தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் நடத்தப்படுகிறது.


இந்நிலையில், பழைய அங்கன்வாடி மையம் அமைந்துள்ள இடத்தின் அருகே, பாலக்கோடு பேரூராட்சி சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதனால், அங்கன்வாடி கட்டிடத்தை புதிதாக கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதி ஆக்கிரமிக்கப்படுவதால், அங்கன்வாடி குழந்தைகளின் வசதியும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


அதனால், குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளை உடனடியாக நிறுத்தி, பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைத்து, அதன் சுற்றுப்புறத்தில் பூங்கா அமைத்து, பள்ளியை அதே இடத்திலேயே மீண்டும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு ஏற்ற இடத்துக்கு மாற்றிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இந்தக் கோரிக்கையை பாலக்கோடு பாரதிய ஜனதா கட்சியினர், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சிவா, நகர பொருளாளர் முனியப்பன், பொருளாதார பிரிவு நகரத் தலைவர் சேகர், நகர பொறுப்பாளர் பச்சையப்பன், மற்றும் அழகு பெருமாள் ஆகியோர் இணைந்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனுவாக அளித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies