Type Here to Get Search Results !

மை தருமபுரி அமைப்பின் சார்பில் அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் உடற்கூறாய்வு மைய ஊழியர்களுக்கு புத்தாடைகள் வழங்கினர்.


தருமபுரி, அக். 16, 2025:

வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, மை தருமபுரி அமைப்பின் சார்பாக ஏழ்மையில் உள்ளோர் மற்றும் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, தருமபுரி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் உடற்கூறாய்வு மைய ஊழியர்கள் என மொத்தம் 20 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி, அவர்களுக்கு தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த சமூக நல நிகழ்வில் எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்ஓய்வு பெற்ற ஆசிரியர் தண்டபாணிமை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜாசெயலாளர் தமிழ்செல்வன்ஒருங்கிணைப்பாளர் அருணாசலம்அமைப்பாளர்கள் கிருஷ்ணன், செந்தில், சண்முகம்தன்னார்வலர்கள் கணேஷ், காதர் ஆகியோர் கலந்து கொண்டு புத்தாடைகள் வழங்கி, தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies