Type Here to Get Search Results !

பொ.மல்லாபுரம் 15ஆம் வார்டில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக வார்டு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.


பாப்பிரெட்டிப்பட்டி, அக்டோபர் 29:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொ.மல்லாபுரம் 15ஆம் வார்டில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக வார்டு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் பேரூராட்சி தலைவர் சாந்தி புஷ்பராஜ் மற்றும் வார்டு உறுப்பினர் ஏ. அஸ்லாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர், உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


பொதுமக்கள் சார்பில் சாலை வசதி, மின்விளக்கு அமைப்பு, குடிநீர் வழங்கல், சாக்கடை கால்வாய் பராமரிப்பு, பேரூராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இவ்விழாவில் பொதுமக்கள் சார்பில் ஆ. சாம் கான், பேரூராட்சி சூப்பர்வைசர் ஜெயபால், காய் கடை மணிகண்டன், சைக்கிள் அலி, வெல்டிங் இலியாஸ், பீடா கடை பாபு உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies