Type Here to Get Search Results !

தருமபுரியில் பெண்களுக்கான இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை முகாம் – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.


தருமபுரி, அக். 09 -

தருமபுரி மாவட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் இன்று (09.10.2025) பைசுஅள்ளி, விஜய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கேன்சர் சென்டர் இணைந்து, பெண்களுக்கான இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மார்பக புற்றுநோய் பெண்களில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகும். நவீன மருத்துவ அறிவியலால், மார்பக மற்றும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும். எனவே, 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.


இத்தகைய முகாம்கள் பெண்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, நோயைக் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் உதவுகின்றன, இதன் மூலம் நோயின் தீவிரத்தையும் குறைக்க முடியும்.


இன்று நடைபெற்ற முகாமில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தொடர்புடைய துறைகள் ரூ.5,000 மதிப்பிலான இலவச பரிசோதனைகளை வழங்கி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. முகாமில் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு.சாந்தி மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies