Type Here to Get Search Results !

நூறு நாள் வேலை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5,000 வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.


தருமபுரி, அக். 08 -


தருமபுரியில், நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊரக தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.5,000 போனஸ் வழங்க வேண்டும் என்பதுடன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தேவராசன் அவர்கள் தலைமை வகித்தார்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாநில துணைத் தலைவர் கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர்கள் வி.பி.சாமிநாதன் (தருமபுரி), கிருஷ்ணன் (காரிமங்கலம்) உள்ளிட்ட நிர்வாகிகள் கோபால், மனோகரன், எம்.சிவன், தங்கவேலு, முனுசாமி, ஜெயவேல், மல்லிகா, அன்னபூர்ணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தின் போது,

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.5,000 தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்,

  • முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் அமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,

  • விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி, நிபந்தனையின்றி வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்

என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் இறுதியில், மாவட்ட குழு உறுப்பினர் பழனி நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies