Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் வரும் 01.11.2025 அன்று காலை 11.00 மணிக்கு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, அக். 26 -

தருமபுரி மாவட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., தகவலின்படி, தருமபுரி மாவட்டத்திலுள்ள 249 கிராம ஊராட்சிகளிலும் 01.11.2025 அன்று காலை 11.00 மணிக்கு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.


இந்த கூட்டத்தில் பின்வரும் விவாதக் குறிகள் இடம்பெற உள்ளது:

  1. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம்

  2. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை

  3. ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த நடவடிக்கைகள்

  4. கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்

  5. வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  6. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்

  7. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II

  8. தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம்

  9. இதர பொருட்கள்


மேற்காண் பொருட்கள் குறித்து விவாதிக்க அனைத்து ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பினரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies