தருமபுரி, அக். 10 -
தகுதி:
-
விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினராக இருக்க வேண்டும் (சாதிச் சான்றிதழ் அவசியம்).
-
குடும்ப ஆண்டு வருமானம் ₹3 இலட்சத்தை மீறக் கூடாது (வருமானச் சான்றிதழ் அவசியம்).
-
மாநில அரசு அங்கீகரித்த அதிகாரியால் வழங்கப்பட்ட வருமானச் சான்றிதழ் அல்லது
-
வர்த்தமானி அதிகாரியால் (Gazetted Officer) சான்றளிக்கப்பட்ட சுய சான்றளிப்பு வருமானச் சான்றிதழ் வழங்கலாம்.
-
-
விண்ணப்பதாரர் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், பிஎச்.டி, முதுகலைப் படிப்புகள் போன்ற துறைகளில் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
-
சேர்க்கை SAT / GMAT / GRE போன்ற தேர்வுகளின் அடிப்படையில் பெற்றிருக்க வேண்டும்.
-
IELTS / TOEFL போன்ற மொழித் திறன் தேர்வுகள் மட்டுமே அடிப்படையாக இருக்கக் கூடாது.
-
-
சேர்க்கை / சலுகைக் கடிதம் கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
-
வயது வரம்பு – 21 முதல் 40 வயது வரை.
நிதியின் அளவு:
-
ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ₹15,00,000 வரை கடன் வழங்கப்படும்.
-
இதில் 85% (₹12.75 லட்சம் வரை) புதுதில்லி தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் மூலமாகவும்,மீதமுள்ள 15% (₹2.25 லட்சம்) தமிழ்நாடு அரசு மூலமாகவும் வழங்கப்படும்.
கடன் பயன்பாடு:
கடன் தொகை சேர்க்கைக் கட்டணம், கல்விக் கட்டணம், புத்தகங்கள், தேர்வு, ஆய்வகம், நூலகக் கட்டணம், உண்டி, உறைவிட வசதி மற்றும் காப்பீட்டு கட்டணங்களைக் கொண்டது.
-
கட்டணங்கள் கல்வி நிறுவனத்துக்கு நேரடியாக செலுத்தப்படும்.
-
முந்தைய ஆண்டு தேர்ச்சி அடிப்படையில் அடுத்த தவணை விடுவிக்கப்படும்.
வட்டி விகிதம் மற்றும் திருப்பிச் செலுத்தல்:
-
வட்டி விகிதம்: வருடத்திற்கு 8%
-
தடைக்காலம்: 5 ஆண்டுகள் (கல்வி முடித்தபின்)
-
திருப்பிச் செலுத்த வேண்டிய காலம்: மொத்தம் 10 ஆண்டுகள் (5 ஆண்டு தடைக்காலம் உட்பட)
-
முன்கூட்டியே கடனை திருப்பிச் செலுத்த அனுமதி உண்டு; எந்தவித முன் கட்டணமும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
-
விண்ணப்பப் படிவத்தை www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.
-
தேவையான ஆவணங்களுடன், விண்ணப்பம் தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.