Type Here to Get Search Results !

பேளாரஹள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை காவலர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.


பாலக்கோடு, அக். 17, 2025 —

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் பேளாரஹள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை காவலர்கள், வார்டு உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதாமாரியப்பன் தலைமையேற்றார்.


நிகழ்வில், ராதாமாரியப்பன் தூய்மை காவலர்களுடன் இணைந்து பட்டாசு வெடித்து தீபாவளி திருநாளை கொண்டாடினார். பின்னர், தூய்மை காவலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அனைத்து தூய்மை காவலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு வெள்ளை பூசணி மற்றும் எலுமிச்சை பழத்தில் கற்பூரம் ஏற்றி, அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டி பூஜை நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், மற்றும் தூய்மை காவலர்கள் திரளாக கலந்து கொண்டு தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies