Type Here to Get Search Results !

சித்தேரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் – ஆ.மணி எம்.பி தொடங்கி வைத்தார்.


அரூர், அக். 07 -

அரூர் சட்டமன்ற தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியத்தின் கீழ் உள்ள சித்தேரி ஊராட்சியில், தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி (MP) அவர்கள் தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து, தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலை வகித்தார்.

முகாமில்,

  • மகளிர் உரிமைத் தொகை,

  • பட்டா சிட்டா பெயர் மாற்றம்,

  • முதியோர் உதவித்தொகை,

  • ஆதார் கார்டு, ரேஷன் கார்டு,

  • இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களிடம் பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.

மேலும் மருத்துவ முகாமில் பிபி, சர்க்கரை நோய் மற்றும் இதர நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் அ. சத்தியமூர்த்திபாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் S. சந்தோஷ்குமார்அரூர் நகரச் செயலாளர் முல்லைரவிஒன்றிய செயலாளர்கள் கோ. சந்திரமோகன், வே. சௌந்தரராசு, M. ரத்தினவேல், சி. முத்துக்குமார், S. சரவணன்பேரூராட்சி துணைத் தலைவர் சூர்யா D. தனபால்A. சண்முகநதி, அத்துடன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies