Type Here to Get Search Results !

காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி – தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் அறிவிப்பு.


தருமபுரி, செப்டம்பர் 1 (ஆவணி 16) :


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) மொத்தம் 3,665 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்கள் அடங்கும்.


இந்தத் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 03.09.2025 முதல் துவங்கி, திங்கள் முதல் வெள்ளி வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளன.


மேலும் 8 இலவச மாதிரி தேர்வுகள் மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ளன. இவை 12.09.2025 முதல் வாரந்தோறும் நடைபெறும்.

தகுதி:

  • குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி.

தேர்வர்களுக்கான வசதிகள்:

  • பள்ளிப் பாடப்புத்தகங்கள் உட்பட 3,000+ நூல்கள் கொண்ட இலவச நூலகம்

  • இலவச Wi-Fi வசதி

  • இலவச கணினி பயன்பாடு உள்ளிட்ட பல வசதிகள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் https://shorturl.at/B33H9 என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

  • மேலும் விவரங்களுக்கு 04342–288890 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலேயே அணுகலாம்.


தகுதி வாய்ந்த தேர்வர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

— தகடூர் குரல் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884