தருமபுரி, செப்டம்பர் 1 (ஆவணி 16)
தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 05.09.2025 (மிலாடி நபி) நாளை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மதுபான சில்லறை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், மேலும் FL-3, FL-3A, FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் மற்றும் முன்னாள் படைவீரர் மதுவிற்பனைக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை 04.09.2025 இரவு 10.00 மணி முதல் 06.09.2025 காலை 12.00 மணி வரை அமலில் இருக்கும். மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலோ அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
— தகடூர் குரல்