Type Here to Get Search Results !

வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு – முஸ்லீம் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: தருமபுரி ஆட்சித்தலைவர் தகவல்.


தருமபுரி, செப்டம்பர் 29:

முஸ்லீம் சிறுபான்மையின மாணவ–மாணவியர்கள் வெளிநாட்டில் முதுகலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான கல்வி உதவித் தொகை (2025–2026) பெறலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு 2025–2026 கல்வியாண்டிற்காக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு தலா ரூ.36 இலட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.


இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் உலகளாவிய QS தரவரிசையில் முதல் 250 இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்தைத் தாண்டக்கூடாது. பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.


பொறியியல், மேலாண்மை, அறிவியல், வேளாண்மை, மருத்துவம், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேயப் படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


விண்ணப்பப் படிவம் www.bcmbcmw.tn.gov.in/welfschemesminorities.html என்ற இணையதளத்தில் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 31.10.2025-க்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என ஆட்சித்தலைவர் சதீஸ் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies