தருமபுரி, செப்டம்பர் 29:
எதிர்வரும் அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், தனியார் ஓட்டல்களின் உரிமம் பெற்ற (FL-3, FL-3A, FL-4A) மதுக்கூடங்கள் மற்றும் முன்னாள் படை வீரர் மது விற்பனைக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட உள்ளன.
இவை அனைத்தும் 01.10.2025 இரவு 10.00 மணி முதல் 03.10.2025 காலை 12.00 மணி வரை மதுபான விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், இந்த உத்தரவை மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்தாலோ அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.