Type Here to Get Search Results !

தும்பலஅள்ளி அணை நீர்வரத்துக் கால்வாய் திட்டம் – நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ஈட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ வலியுறுத்தல்.


தருமபுரி, செப். 01 (ஆவணி 16) –


தருமபுரி மாவட்டத்தில் நீர்வளக் குறைபாட்டை தீர்க்க மிக முக்கியமான தும்பலஅள்ளி அணை நீர்வரத்துக் கால்வாய் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும், நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நில ஈட்டுத்தொகையை உடனடியாக வழங்கவும் வேண்டுமென தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஷ்வரன் அவர்கள், தமிழக தலைமை செயலாளர் நா. முருகனாந்தம் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் அளித்து வலியுறுத்தினார்.


திட்டத்தின் படி, எண்ணேகொல்புதூர் அணைக்கட்டில் இருந்து வலதுபுறம் 51 கி.மீ நீளத்தில் நீர்வரத்துக் கால்வாய் அமைத்து தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும். இதற்காக கால்வாய் அமைக்கும் பணிக்கே 233 கோடி ரூபாய் மற்றும் நிலம் கையகப்படுத்த 112 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால்:

  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைக்கும்.

  • தருமபுரி மாவட்டத்தில் தும்பலஅள்ளி ஏரியில் இருந்து 22 ஊராட்சிகளுக்குட்பட்ட 65க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பும்.

  • ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

  • பல லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.


ஆனால், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலம் வழங்கிய விவசாயிகளில் பலருக்கு இன்னும் முழுமையான ஈட்டுத்தொகை வழங்கப்படவில்லை. இதனால் பல விவசாயிகள் பொருளாதார சிரமத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டது.


எனவே, நிலம் அளித்த விவசாயிகளுக்கான ஈட்டுத்தொகையை விரைந்து வழங்கவும், கால்வாய் அமைக்கும் பணிகளை வேகமாக நிறைவேற்றி, தும்பலஅள்ளி அணைக்கு நீர் கொண்டு வரும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என எம்.எல்.ஏ வலியுறுத்தினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies