தருமபுரி, 25.09.2025 | புரட்டாசி 09
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT students கல்வி உதவித்தொகைக்கு மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EBC), சீர்மரபினர் (DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் மத்திய அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2025-26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் பட்டியிலிடப்பட்ட (Top Class Schools) பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து ஏற்கப்படுகின்றன. இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2025 ஆகும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தைச் சரிபார்க்க வேண்டிய கடைசி நாள் 15.10.2025. கடந்த ஆண்டில் பயனடைந்த மாணவர்கள் Renewal Application இணைப்பின் மூலம் OTR Number (One Time Registration) பயன்படுத்தி தங்கள் விண்ணப்பத்தைப் புதுப்பிக்க வேண்டும். புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது கைப்பேசி எண் மற்றும் ஆதார் விவரங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பதிவு செய்தால் OTR Number மற்றும் Password வழங்கப்படும்.
OTR Number-ஐ பயன்படுத்தி உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து புதிய விண்ணப்பத்தையும் (Fresh Application) மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிய தொடர்புடைய முதன்மை கல்வி அலுவலர்களை அணுகலாம். கூடுதல் விபரங்களுக்கு www.scholarships.gov.in இணையதளத்தைப் பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.