ஓகேனக்கல், செப்டம்பர் 2:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் விடுதலை முன்னணி (LLF) சார்பில் மாநில பேரவை சிறப்பு கூட்டமும் தருமபுரி மண்டல செயற்குழு கூட்டமும் நடைபெற்றது.
இந்தக் கூட்டம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மற்றும் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலத் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் அறிவுரையின்படி, சங்கத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த தொழிலாளர்களை மத்திய தொழிற்சங்க பொதுச் செயலாளர் வீரமகேந்திரன் (மயில்) வரவேற்றார்.
முக்கிய கோரிக்கைகள்:
கூட்டத்தில், மாநிலம் முழுவதும் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:
-
போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.
-
ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அன்றே பணபலன்கள் வழங்கப்பட வேண்டும்.
-
15-வது ஊதிய ஒப்பந்தத்தின் படி நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும்.