Type Here to Get Search Results !

கம்மாளப்பட்டி பிரிவு சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்.


பாலக்கோடு, செப்டம்பர் 21 | புரட்டாசி 05:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கம்மாளப்பட்டி பிரிவு சாலையில் நடந்த சாலை விபத்தில் 60 வயது முதியவர் படுகாயமடைந்தார். சோமனஅள்ளி கதியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள் (60) கூலி தொழிலாளி. நேற்றிரவு வேலை முடித்து சோமனஅள்ளியில் இருந்து கதியம்பட்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கம்மாளப்பட்டி பிரிவு சாலையில் அவர் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் அவரை மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.


இதில் பெருமாள் கடுமையாக காயமடைந்தார். அருகில் சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884