பாலக்கோடு, செப்டம்பர் 21 | புரட்டாசி 05:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கம்மாளப்பட்டி பிரிவு சாலையில் நடந்த சாலை விபத்தில் 60 வயது முதியவர் படுகாயமடைந்தார். சோமனஅள்ளி கதியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள் (60) கூலி தொழிலாளி. நேற்றிரவு வேலை முடித்து சோமனஅள்ளியில் இருந்து கதியம்பட்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கம்மாளப்பட்டி பிரிவு சாலையில் அவர் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் அவரை மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பெருமாள் கடுமையாக காயமடைந்தார். அருகில் சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.