Type Here to Get Search Results !

தருமபுரியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் – பல ஊராட்சிகளில் நடைபெற்றது.


தருமபுரி, செப்டம்பர் 23 | புரட்டாசி 06:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் 23 செப்டம்பர் 2025, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தருமபுரி ஒன்றியத்தில் ஆண்டிஅள்ளி, கொண்டம்பட்டி ஊராட்சிகளில் ஆண்டிஅள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் முகாம் நடைபெற்றது. மொரப்பூர் ஒன்றியத்தில் பண்ணைகுளம், வகுரப்பம்பட்டி ஊராட்சிகளுக்கான முகாம் வகுரப்பம்பட்டி சேவை மையத்தில் நடந்தது. காரிமங்கலம் ஒன்றியத்தில் முருகம்பட்டி, பந்தாரஅள்ளி ஊராட்சிகளுக்கான முகாம் முருகம்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.


இந்த முகாம்களில் பொதுமக்கள் மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, சிட்டா பட்டா பெயர் மாற்றம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மனுக்கள் அளித்தனர். மேலும் மருத்துவ முகாமில் பிபி, சர்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனைகளையும் செய்து கொண்டனர். இந்நிகழ்வுகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies