Type Here to Get Search Results !

பையர்நத்தம் அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது.


தருமபுரி, செப்டம்பர் 05 (ஆவணி 20):

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பையர்நத்தம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் திரு. வெ. வெங்கடாசலம் அவர்களுக்கு, 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு வழங்கும் டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.


சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின மாநில விழாவில், தமிழ்நாடு துணை முதல்வரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் இணைந்து இந்த விருதை வழங்கினர். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், பள்ளியின் வளர்ச்சிக்கும் செய்த பணி மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டி இந்த கௌரவம் வழங்கப்பட்டது.


- பொம்மிடி செய்தியாளர் வெங்கடேசன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884