Type Here to Get Search Results !

அண்ணல் காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள் – மாணவர்கள் பங்கேற்கும்படி அழைப்பு.


தருமபுரி, செப்டம்பர் 26 | புரட்டாசி 10 :

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆப. தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் 2021-22 ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் அறிவிப்பின் அடிப்படையில், மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன.


நிகழ்வுகள் விவரம்:

  • நாட்கள்: 07.10.2025, 08.10.2025

  • இடம்: தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி

  • நேரம்: காலை 09.30 மணி முதல்


தலைப்புகள்:

  • பள்ளி மாணவர்கள் (காந்தி): “காந்தி கண்ட இந்தியா – இமயம் முதல் குமரி வரை, தென்னாப்பிக்காவில் காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு”

  • கல்லூரி மாணவர்கள் (காந்தி): “சத்திய சோதனை, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள், உப்புசத்தியாகிரகத்தில் காந்தியடிகளின் பங்கு”

  • பள்ளி மாணவர்கள் (நேரு): “சுதந்திரப் போராட்டத்தில் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், மனிதருள் மாணிக்கம், குழந்தைகள் தினவிழா”

  • கல்லூரி மாணவர்கள் (நேரு): “ஆசிய லோதி, நேருவின் வெளியுறவுக் கொள்கை, நேரு கட்டமைத்த இந்தியா”


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்:

  • முதலாவது பரிசு: ரூ. 5,000

  • இரண்டாவது பரிசு: ரூ. 3,000

  • மூன்றாவது பரிசு: ரூ. 2,000

  • பாராட்டுச் சான்றிதழ் அனைவருக்கும்

  • அரசு பள்ளி சிறப்பு பரிசு: ரூ. 2,000 (இருவர்)


மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர்களின் அனுமதி பெற்று இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.

Permalink:

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies