Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி அருகே கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி மீட்பு.


மாரண்டஹள்ளி, செப்டம்பர் 10 (ஆவணி 25):


மாரண்டஅள்ளி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று மாலை மாரண்டஅள்ளி போலீசார் கடத்திக்கொள்மேடு ஏரி மதகு பகுதியில் ரோந்து சென்றபோது, புதரில் கேட்பாரற்ற நிலையில் நாட்டு துப்பாக்கி கிடப்பதை கண்டனர். உடனடியாக அதனை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர்.


இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த நாட்டு துப்பாக்கி யாருடையது, எந்த நோக்கத்திற்காக புதரில் பதுக்கி வைக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கத்திற்காக பதுக்கி வைத்திருக்கக்கூடும் என்ற கோணத்தையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884