Type Here to Get Search Results !

அரூரில் பெண்ணை பிளேடால் தாக்கிய கூலித்தொழிலாளி கைது


அரூர், செப்டம்பர் 27 | புரட்டாசி 11
:

அரூர் பழையபேட்டை மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த மூர்த்தி (33) என்றவர், அவரது மனைவி சௌமியா (29) மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மூர்த்தி மரணமடைந்தார். அதன் பின்னர், சௌமியா அரூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே டீக்கடை நடத்தி வந்தார்.


இந்த நிலையில், சௌமியாவுக்கு பழையபேட்டைச் சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 24ஆம் தேதி இரவு, டீக்கடைக்கு வந்த சஞ்சயின் தந்தை பிரபு (54) தனது மகனை திருமணம் செய்து கொள்வாயா என சௌமியாவிடம் கேட்டார். அதற்கு சௌமியா மறுத்து விட்டார்.


இதில் ஆத்திரமடைந்த பிரபு, தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் சௌமியாவின் கழுத்தை அறுக்க முயன்றார். சௌமியா விலகி ஓடிச் சென்றபோதிலும், அவரது இடது கழுத்தில் காயம் ஏற்பட்டது.


அப்போது அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து உதவியதால் பிரபு அங்கிருந்து தப்பிச் சென்றார். செல்லும்போது, "எப்போது இருந்தாலும் உன்னை கொல்லாமல் விடமாட்டேன்" என மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சௌமியா அளித்த புகாரின் பேரில், அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies