Type Here to Get Search Results !

சைனிக் பள்ளி மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை – விண்ணப்பிக்க அழைப்பு.


தருமபுரி, ஆக 04 | ஆடி 19 -


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இயங்கி வரும் சைனிக் பள்ளியில், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழ்நாடு பூர்விக மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையாக வருடத்திற்கு ரூ.25,000 வழங்கப்பட்டு வருகிறது. இச்சலுகை 2022–2023 கல்வியாண்டில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கானது. குறிப்பாக, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் கைம்பெண்களின் சிறார்களும் இதில் பயன் பெறலாம்.


மேலே குறிப்பிடப்பட்ட கல்வியாண்டில் பயின்றும், இச்சலுகையை பெறாதவர்கள், தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்களும், உடனடியாக ஒட்டப்பட்டி பழைய குவார்ட்டர்ஸில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் உரிய விண்ணப்பப் படிவத்தை பெற்று சமர்ப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு 04342-297844 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884