தருமபுரி, ஆகஸ்ட் 04 | ஆடி 19 -
தருமபுரி மாவட்டம் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களின் விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் நாள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதல் வார வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 08.08.2025, வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டம், வருவாய் கோட்ட அலுவலர் திருமதி இரா. காயத்ரி அவர்கள் தலைமையில் நடைபெறும்.
சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயி சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, என வருவாய் கோட்ட அலுவலர் திருமதி இரா. காயத்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.