Type Here to Get Search Results !

பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம் தொடக்கம்.


தருமபுரி, ஆக 04 | ஆடி 20 -


தர்மபுரி அருகே பைசுஅள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இக்கல்வியாண்டில் சேர்க்கை பெற்றுள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஐந்து நாட்கள் நடைபெறும் புத்தாக்கப் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது.


துவக்க விழாவில், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் முனைவர் ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார். தனது உரையில், “முதுகலைப் படிக்கும் போதே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி, வாழ்க்கையில் வரும் சவால்களை சமாளித்து வெற்றியடைய வேண்டும். மேலும், கைபேசி மற்றும் பிற அறிவியல் தகவல் தொடர்பு சாதனங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும்” என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் செல்வபாண்டியன் அவர்கள் வரவேற்புரையாற்றி, மையம் கடந்த 10 ஆண்டுகளாக உயர்கல்வித் துறையில் புரிந்த சாதனைகள், நிதி உதவிகள் மற்றும் அதன்மூலம் மேம்படுத்தப்பட்ட ஆய்வகங்கள் பற்றிச் சிறப்பித்தார். பின்னர், கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் செங்குட்டுவேலன் நன்றியுரை வழங்கினார்.


இந்த முகாமில், ஆராய்ச்சி மையத்தின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கமலம் சர்வதேச பள்ளி தாளாளர் உள்ளிட்ட நிபுணர்கள் தொடர்ந்து வரும் நாட்களில் சிறப்புரையாற்றவுள்ளனர். மாணவர்களுக்கு தகவல் தொடர்பு திறன் மேம்பாடு, தலைமைத்துவ பயிற்சி, போட்டித் தேர்வுகள் விழிப்புணர்வு, வாழ்வியல் வழிகாட்டுதல் போன்ற தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.


இந்நிகழ்ச்சியை ஆங்கிலத் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் சரண்யா, இரண்டாம் ஆண்டு மாணவிகள் ஜெயஸ்ரீ மற்றும் கலைமணி ஆகியோர் தொகுத்து வழங்கினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies