பாப்பிரெட்டிப்பட்டி, ஆகஸ்ட் 01 | ஆடி 15 -
வெங்கடசமுத்திரம் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மேல் மூத்தோர் கால்பந்து போட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று சரக அளவில் முதலிடம் பெற்றனர். இதன் மூலம் அவர்கள் மாவட்ட மட்டப் போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெகஜீவன்ராம் மற்றும் ஜெகன்குட்டிமணி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இவர்களுடன் சேர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் கலைவாணன், உதவி தலைமை ஆசிரியர் ரகு, கணினி ஆசிரியர் பார்த்தீபன், பட்டதாரி ஆசிரியர் ராஜாமணி உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தியும் பாராட்டியும் கௌரவித்தனர்.