Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே இருளர் இன குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா – முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.


பாலக்கோடு, ஆக 19 | ஆவணி 3 


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட போடங்கள் கிராமம் தேனருவி பகுதியில், கடந்த 50 ஆண்டுகளாக வனப்பகுதியில் வீடின்றி வாழ்ந்து வந்த 24 இருளர் இனக் குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி மிகுந்த சிரமத்துடன் தங்கியிருந்தனர்.


இந்நிலை குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், திராவிட மாடல் அரசின் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற தத்துவத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் 17 ஆம் தேதி தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், அக்குடும்பங்களுக்கான வீட்டு மனை பட்டாவை வழங்கி, அவர்களின் நீண்ட நாள் கனவை நனவாக்கித் தந்தார்.


மேலும், வீடு, மின்சாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகளை அக்குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக முதல்வருடன் இணைந்து பாடுபட்ட வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பாராளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.வி.டி. கோபால் ஆகியோருக்கு இருளர் இன மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.


அதேபோல், இருளர் இன மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்டங்கள் கிடைக்க ஓய்வின்றி உழைத்த திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் எம்.வி.டி. கோபாலுக்கு, மக்கள் நேற்று அவரது இல்லத்தில் நேரில் சென்று சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.


இந்த நிகழ்வில் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் முனிராஜ், அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் சக்தி, முன்னாள் கவுன்சிலர் குமார், முன்னாள் வார்டு உறுப்பினர் முனிராஜ், கிளைக் கழக நிர்வாகிகள் வெங்கடேசன், மூர்த்தி, வரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884