Type Here to Get Search Results !

பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நடைப்பெற்றது.


பாலக்கோடு, ஆகஸ்ட் 23, 2025 (ஆவணி 7) :


மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., இன்று பார்வையிட்டார்.


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 21.04.2025 அன்று உயர் மருத்துவ சேவைகள் வழங்க முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 03.06.2025 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 157ன் படி, “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் முதலமைச்சர் அவர்களால் 02.08.2025 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.


இதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை மொத்தம் 30 உயர் மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன. இன்றைய முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது.


மருத்துவ சேவைகள்

இந்த முகாமில் 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அவை:

  • பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, பேறுகால, குழந்தைகள் நலம்

  • இதயநலம், நரம்பியல், நுரையீரல், நீரிழிவு, தோல் மருத்துவம்

  • பல், கண், காது-மூக்கு-தொண்டை, மனநலம்

  • இயன்முறை, இயற்கை மருத்துவம், உணவியல் ஆலோசனை


மேலும், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள், இதய நோயாளிகள், படுக்கையிலிருந்து எழ முடியாத நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறிவைத்து இம்முகாம் நடத்தப்பட்டது.


சிறப்பு நலன்கள்

  • பரிசோதனைக்கு வரும் அனைவருக்கும் ஆபா கார்டு (ABHA CARD) உருவாக்கப்படும்.

  • முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் (CMIIS) பதிவு செய்யப்படும்.

  • மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

  • கண்புரை நோயாளிகள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்படுவர்.

  • நோயாளிகளுக்கு இலவச பரிசோதனை, சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.


இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. பூபேஷ், இணை இயக்குநர் (மருத்துவம் & ஊரக நலப்பணிகள்) மரு. சாந்தி, பாலக்கோடு பேரூராட்சி தலைவர் திரு. பி. கே. முரளி, பல அரசுத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884