பாலக்கோடு, ஆக 03 | ஆடி 18 -
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தளவாய்அள்ளி புதூரைச் சேர்ந்த காளியப்பன் (60) என்பவர், பாலக்கோடு நோக்கி தனது மொபட்டில் பயணம் செய்து கொண்டிருந்தார். காவாக்கரை பகுதியில் சென்றபோது, பின்னால் இருந்து வந்த மினி சரக்கு வாகனம், காளியப்பன் ஓட்டிய மொபட்டில் மோதியது. தாக்கத்தின் விளைவாக அவர் பலத்த காயமடைந்தார்.
உடனே அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.