Type Here to Get Search Results !

17ம் தேதி தருமபுரியில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணியாளர் தேர்வு – மாவட்டத்தில் 49 மையங்களில் 2,975 பேர் எழுதுகின்றனர்.


தருமபுரி, ஆகஸ்ட் 14 | ஆடி 29 -



தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணியாளர் தேர்வு (Non–Interview Posts) 17.08.2025 அன்று நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் இந்தத் தேர்வில் மொத்தம் 2,975 தேர்வர்கள் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் 49 தேர்வு மையங்களில் OMR தேர்வாகவும், 14 தேர்வு மையங்களில் Descriptive Type தேர்வாகவும் எழுத உள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்டம் முழுவதும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்கள் தேர்வு மைய விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். தேர்வு நாளில் உதவிக்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்றும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் “May I Help You” உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

  1. மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மையம்

    • Landline: 1077, 04342-231077, 04342-231500, 04342-230067

    • Mobile: 8903091777, 8973679777, 9025142801, 9498169438

  2. தருமபுரி நகர பேருந்து நிலையம் – TNPSC உதவி மையம்

    • திரு. சின்னசாமி (FI, TNSTC): 9443456003

    • திரு. மோகேசுவரன் (FI, TNSTC): 9489288138

    • திரு. கோமலவெள்ராஜ் (கிராம நிர்வாக அலுவலர்): 8189870685, 9498109850

தேர்வர்கள், தங்கள் ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையத்துக்கான விதிமுறைகளை முழுமையாக படித்து, நேரத்திற்கு முன் தேர்வு மையம் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies