தருமபுரி, ஆகஸ்ட் 15, 2025 (ஆடி 30) –
தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி நகர மன்ற தலைவி லட்சுமி நாட்டான் மாது கலந்து கொண்டு, மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். விழாவில் நகராட்சி ஆணையர் சேகர், திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர் நாட்டான் மாது, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.
.gif)

.jpg)